Saturday, May 27, 2023

தகவல் தொழில்நுட்ப ம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறன் மிக்கவர்களுக்கு ரஷ்யாவில் அதிக வேலைவாய்ப்பு

இந்திய தொழில் வர்த்தக சபை (ஐசிசிஐ) கோவை கிளை தலைவர் ராமலு தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ரஷ்யா நாட்டின் தென்னிந்தியாவுக்கான தலைமை தூதரக அதிகாரி ஒலெக் அவ்தீவ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக உள்ளது. இருநாடுகள் இணைந்து தயாரித்துள்ள 'பிரமோஸ்' அதிவேக ஏவுகணை, நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி உள்ளிட்ட பல வழி முறைகளில் ஏவப்படக்கூடிய தன்மை கொண்டது. பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேளாண், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யாவில் அதிக திறமை வாய்ந்த வல்லுநர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள திறன்மிக்க மனிதவளம் முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து ரஷ்ய நாட்டுக்கு பணியாற்ற செல்ல விரும்பும் பல்துறை வல்லுநர்களுக்கு விசா வழங்குவதில் தொடங்கி தேவையான உதவிகள் தூதரகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள், எல்பிஜி, பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த கமிஷனின் பரிந்துரைப்படி ரஷ்யா 500 பொருட்களை இந்தியாவிடம் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினர் சரியான முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தொழில்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்திய தொழில் வர்த்தக சபை கோவை துணைத் தலைவர் சுந்தரம், செயலாளர் அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

மாலை நேரத்தில் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்லன்னா பணப் பிரச்சனையை சந்திப்பீங்க!!

இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், அனைத்து முக்கிய பண்டிகைகள் மற்றும் விஷேச நாட்களில் தானம் அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தான தர்மமின்றி கடவுளை மட்டும் வணங்குவதால் எவ்வித பலனும் கிடைக்காது. தானம் செய்வதாக இருந்தால், அதை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு செய்வது தீமையைத் தருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் பின்வரும் பொருட்களை தானம் செய்வது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும்.

உடை, காலணிகள்

பல பெண்களுக்கு வெளியே செல்லும் போது தெரிந்தவர்களிடம் விருப்பமான அணிகலன்களை வாங்கி அணியும் பழக்கம் இருக்கும். ஜோதிடத்தின் படி, எப்போதும் ஒருவர் மற்றவர்களின் உடைகளை, காலணிகள், கைக்கடிகாரங்கள் போன்றவற்றை வாங்கி அணியக்கூடாது. இதன் காரணமாக, அந்த நபரின் எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் வந்துவிடும். அதோடு இது அலர்ஜி பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களின் பொருளை வாங்கிப் பயன்படுத்தினாலும், வாங்கிய பொருட்களை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம்.

கைக்கடிகாரம்

மாலையில் கைக்கடிகாரத்தை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களிடம் வாங்கினாலும், அதை மாலை வேளையில் திருப்பித் தர வேண்டாம். இல்லாவிட்டால், நீங்கள் சிக்கலில் மாட்டி கஷ்டப்படுவீர்கள்.

கடன் கொடுக்காதீர்

சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள். மாலை வேளையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வரும் நேரமாக கூறப்படுகிறது. எனவே இந்நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள். இல்லையென்றால் வீட்டில் வறுமை அதிகரிக்கலாம்.

புளிப்பான பொருட்களைக் கொடுக்காதீர்

மாலையில் எக்காரணம் கொண்டும் புளிப்பான பொருட்களான தயிர், ஊறுகாய் போன்றவற்றைக் கொடுக்க வேண்டாம். இதன் காரணமாக, உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தேவி அவர்களின் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதனால் உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை அதிகரிக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள் ஒரு மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. அதோடு மஞ்சள் லட்சுமி தேவி குடியிருக்கும் பொருளாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட மஞ்சளை மாலை வேளையில் மற்றவருக்கு கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்.

உப்பு

மாலை வேளையில் எப்போதும் யாருக்கும் உப்பை கொடுக்காதீர்கள். உப்பு மகாலட்சுமியின் அம்சம். இதை மற்றவர்களுக்கு கொடுத்தால், வீட்டில் பணப்பிரச்சனை மற்றும் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

Tuesday, October 4, 2022

கோழி, செம்மறி ஆடு வளர்ப்பில் ஆர்வம் கொண்டவரா? ரூ.50 லட்சம் வரை மானியம் அறிவிப்பு

கால்நடைத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தொழில்முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, புறக்கடை கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டினத்தை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலாகும்.

கால்நடைகள் சார்ந்த தொழில் மேற்கொள்ள முனைவோர் இத்திட்டத்தில் பங்கேற்று கால்நடை பெருக்கத்தில் பங்கு பெற்று பயன் பெறுமாறு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; இத்திட்டத்தின் கீழ் கோழி வளர்க்க முனைவோர் 1000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்து நான்கு வார வயது வரை வளர்த்து விற்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

யார் பயன்பெறலாம்?

இத்திட்டத்தின் கீழ் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள் (JLG), பிரிவு 8 நிறுவனங்கள் ஆகியவை தகுதியானவர்கள் ஆவர். முனைவோர் சொந்தமாக அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும்.

தொழில்முனைவோர்/தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும், திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும்.

பயன் பெற விரும்புவோர் https://nim.udyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் இத்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தும் நிறுவனமான தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமையின் திட்ட மதிப்பீட்டு குழுவால் பரிசீலிக்கப்பட்டு திட்ட வழிகாட்டுதலின் படி உள்ளவற்றை கடன் வசதி பெற வங்கிக்கு அனுப்பப்படும். பின்னர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற அனுப்பப்படும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

திட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் கீழ் இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

nlm.udyamimitra

Tamil Nadu Livestock Development Agency (TNLDA)

OPERATION GUIDELINES

மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்,பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் சென்னை, தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.

உங்கள் ஏடிஎம் PIN நம்பர் இதுவா:? உடனடியாக மாற்றி விடுங்கள்!!

படித்தவர்கள் படிக்காதவர்கள் போன்ற பலரிடமும் ஏடிஎம் கார்டுகள் தற்போது உள்ளன.ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் பல பேர் ஏடிஎம் பின் நம்பர் மறந்துவிடக்கூடாது என்பதற்காக பிறந்த நாள் வண்டி நம்பர் அல்லது வருடம் இதுபோன்று மூன்றாவது நபர்கள் எளிதில் வியூகிக்கக்கூடிய pin நம்பர்களையே வைத்திருக்கின்றோம்.

வங்கிகள் சார்பில் கூட இது போன்ற பிறர் எளிமையாக கண்டுபிடிக்க கூடிய பாஸ்வேர்டை வைக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இருப்பினும் பலர் இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகளை வைத்திருக்கின்றன.

அவ்வாறு எளிதாக ஏடிஎம் கடவுச்சொல் வைத்திருப்பவர்களுக்கான ஓர் உதாரண செய்தி தான் இது.திருவண்ணாமலையைச் சேர்ந்த ரேவதி என்னும் பெண் ஒருவர் விடுமுறைக்காக சென்னை வந்துள்ளார்.அங்கு அவரது கைப்பையை தொலைத்துள்ளார்.அந்தப் பையனுள் இருந்த ஆதார் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகளை கைப்பற்றிய கொள்ளையர்கள்,ஆதார் கார்டில் இருந்த அந்தப் பெண்ணின் பிறந்த தேதியை ஏடிஎம் பாஸ்வேர்டாக போட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் ஏடிஎம் பாஸ்வேர்ட் அவரின் பிறந்த தேதியாக இருந்ததனால் அந்த கொள்ளையர்கள் அவரின் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.இது தொடர்பாக அப்பெண் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.அந்த ஏடிஎம் கார்டையும் வங்கி தரப்பில் முடக்கப்பட்டுள்ளது.

வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகள் அமல்

வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், 'சர்வர் அப்டேட்' பணிகளால் ஏராளமான விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு, சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில், புதிய நடைமுறையை ஏற்படுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, வாரிசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய அரசாணை(எண்:478) வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை, இறந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் (மகன் இறந்திருந்தால், மருமகள் மற்றும் பேரன், பேத்தி) வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.இனி, கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவர். சான்றிதழில், உயிருடன் இருக்கின்றனரா அல்லது இறந்துவிட்டனரா என்று மட்டும் தெளிவாக குறிப்பிட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் அல்லது மகள் இறந்திருந்தால், அவரது வாரிசுதாரர் தனியே வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதவர் இறந்தால், தந்தை, தாய், சகோதரர், சகோதரிகள் வாரிசுகளாக அறிவிக்கப்படுவர். ஒருவர், ஏழு ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால், கோர்ட்டில் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 'சர்வர் அப்டேட்' பணிகள் நடப்பதால், விண்ணப்பங்கள் தேக்கம் அடைந்துள்ளன. 

விரைவில், சீரமைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும்.வாரிசுகள், 18 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் பாதுகாவலர் அல்லது இறந்தவரின் சகோதரர் அல்லது சகோதரிகள் விண்ணப்பிக்கலாம். தாசில்தார் வழங்கிய வாரிசு சான்று தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் மேல்முறையீடு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மகளிர் இலவச டிக்கெட்டுக்கு இனி காசு வாங்கலாம்.. - போக்குவரத்து துறை.!

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மற்றும் பிற ஆண் பயணிகள் இழிவாக நடத்துவது அன்றாடம் தொடர்ந்து வரும் ஒரு விஷயம்தான்.

சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் தானே பயணிக்கிறீர் என்று ஒரு பெண் பயணியை பார்த்து கேட்டது வீடியோவாக பரவி சச்சையானது. இதனை தொடர்ந்து தற்போது இலவசத்தில் பயணிக்க மாட்டேன் என்று பெண்கள் சபதம் எடுத்து பேருந்துகளில் கட்டணம் கொடுத்து பயணச்சீட்டு பெறுகிறார்கள்.


இந்த விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக கிளம்பிய நிலையில், என்னசெய்வது என்று தெரியாமல் அரசு விழிபிதுங்கி நின்றது.

இந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டை பணம் கொடுத்து தான் பயணம் செய்தேன் என்று ஏதாவது பெண்கள் விருப்பப்பட்டால் அவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று போக்குவரத்து துறை அனைத்து நடத்துனர்களுக்கும் வாய்மொழியாக அறிவுறுத்தி உள்ளது

ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆளெடுப்பு; அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்!

ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

வெவ்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆள்சேர்ப்பு நிலையத்தில் தங்களால் நியமனம் செய்யப்பட வேண்டிய ஒரு வருவாய்க் கோட்டாட்சியரை தாங்களே உடனடியாக நியமனம் செய்து ஆணை வழங்க வேண்டும். அந்த ஆணையின் நகலினை தங்களுடைய மாவட்டத்திற்கு தொடர்புடைய கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ள மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலருக்கு கூர்நோக்குடைய மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்குப் பின்னராக இந்த தெரிவு நடவடிக்கைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கக்கூடும் என்பதால் தெரிவு நடவடிக்கைகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாளில் மையத்திற்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கண்காணிப்பாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இதையடுத்து, இப்பணிக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன்பிறகு, நேர்முகத்தேர்வு டிச. 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி, தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்ட ஆட்சியர், இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC GENERAL TAMIL ONLINE TEST 01